பாகற்காய்

பாகற்காய்

நான்கு பழுத்த பழத்தில் இருந்து விதைககளை எடுத்து கொள்ளலாம் நண்பர்களே. நேரடியாக விதைக்கலாம் நண்பர்களே.ஒரு குழிக்கு மூன்று விதை வரை போடலாம்.

நிலம் தயாரிப்பு
மண் நன்றாக  கட்டி இல்லாமல் பொழ பொழவென உழுது இருக்க வேண்டும். களைகள் மற்றும் பிளாடிக் பொருட்கள் , கல் முதலியவை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் 

ரகம்
மெழுகுபாவை, குருந்தலைபாவை, மிதிபாவை.ஒட்டு ரகம் 

பயிர் இடைவெளி
வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்கு செடி 2 அடி

மஞ்சள் இலை வைரஸ் நோய் தாக்குதல்
மஞ்சள் இலை வைரஸ் நோய் தாக்குதலின் அறிகுறி   இலை சுருண்டு சிறுத்து, பழுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும்முறைமூன்று நாள் புளித்த தயிரை மாலை வேலையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை தொழில்நுட்பம்
விதைகள் விதைக்கபட்டு 65 நாட்களில் இருந்து வாரம் 1 முறை விதம்  2 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். வேலிகளில் நான்கு படரகூடியது.

பாகற்காயில் கிடைக்கும் நன்மைகள்:
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பிடிப்போர் பலர். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ, அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதோடு, நோயின் தாக்கம் ஏற்படாதவாறு உடலைப் பாதுகாக்கிறது. எப்படி நம்மில் பலருக்கும் எது ஆரோக்கியமானதோ அது பிடிக்காதோ, அதேப்போல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பாகற்காயும் பிடிக்காது.

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று
பார்போம்.

சுவாச கோளாறுகள்:
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

கல்லீரல் பிரச்சனைகள்:
தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி:
பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருக்கள்:
உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மலச்சிக்கல்:
மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

ஆரோக்கியமான சிறுநீரகம்:
பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய்:
பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புற்றுநோய்:
பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.


மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..

No comments:

Post a Comment

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.