வளர்ப்பு முறை
§ நல்ல பழுத்து காய்ந்து முற்றிய காய்களில் இருந்து விதைகளை எடுத்து
கொள்ளலாம்.
§ ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும்.
§ அந்த விதைகளை எடுத்து குழித்தட்டில் நாற்றுவிட்டு, செடி கால் அடி
வளர்ந்த பிறகு தனி தனியாக எடுத்து நடவேண்டும்.அல்லது முற்றிய காய்களின் விதைகளை
எடுத்து நேரடியாகவும் மண்ணில் ஊன்றலாம்.
§ அணைத்து விதை பண்ணைகளிலும் சுண்டக்காய் விதை கிடைக்கும்.
§ நாற்றுகளுக்கு ஒரு நாள் விட்டு,ஒரு நாள் தண்ணீர் ஊற்றலாம்.
§ இதை இன விருத்தி செய்ய விதை மூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.
§ இதை வளர்க்க பெரிய மண் தொட்டி ஏதும் தேவை இல்லை. 20 லிட்டர் வட்டர் கேன்
போதுமானது.
சுண்டக்காய் குறிப்புகள்
சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது.இது சுமார் 5 அடி முதல் 10 அடி உயரம் கூட
வளரக்கூடியது.எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று
சொல்வார்கள். ஏறத்தாழ் ஓர் ஆள் உயரத்துக்கு வளரும்.இதனை வீடுகளில் வளர்க்கலாம். சிறிய முட்கள்
கொண்டது. வெள்ளை நிறப்பூக்கள் கொத்து கொத்தாகப் பூத்து காய்களாக
மாறுகின்றன.சுண்டைக் காயை குழம்பில் போட்டும் கறி செய்தும் சாப்பிடலாம்.மருத்துவ
குணம் கொண்டது.
சுண்டையில் இரு வகையுண்டு.மலை காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம
வெளியிலும் வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர்.
அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில்
அமைந்த இலைகளையும் வெண் நிரப் பூங் கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும்.
இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. வீட்டுத்
தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை
பச்சையாக சமைத்து உண்ணலாம்.நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் இவற்றை
போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப்
புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பழம் காய்ந்தால்
மரநிர வத்தலாக மாறிவிடும்.காய் சற்று கசப்புடையது வற்றலாகக் கடைகளில் கிடைக்கும்.
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது.சுண்டக்காயை
வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும்,காரகுழம்பில் இந்த வற்றலை சேர்த்து சமையல் செய்தும் சாப்பிடலாம். அவ்வளவு
அருமையாக இருக்கும்.
கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள
கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது)
வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு
இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.
வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய்
சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும்.வயிற்றின் உட்புறச்
சுவர்கள் பலமடையும். சுண்டைக்காய் வயற்று கிருமிகளை ஒழிக்கும்.
கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான
நோய்களுக்கு மருந்தா கின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். சுண்டைக்காயுடன், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது.
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில்
காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து
சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.இது மார்புச்சளியைப் போக்கும்.
குடலில் உள்ள அசடுகளை நீக்கும் ஒரு மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் உபயோகப்படும் ஒரு செடியாகும்.சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்தப்
பயன்படுகிறது.சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து
எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும்.
வயிற்றுப் போக்கு நின்று விடும்.
சுண்டைக்காய் சூப்
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து
பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம்,தலைச்சுற்றல்
நீங்கும்.
இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம்
உள்ளது. ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்பு சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள்,
நாள்தோறும் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து
சாப்பிடவேண்டும்,நோய் கட்டுப்படும்.
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது.
100 கிராம் காயில் 22.5 மி.கி.
இரும்பு சத்தும், 390 மி.கி.
கால்சியமும், 180 மி.கி.
பாஸ்பரசும் உள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே ஊட்டச்சத்து
பற்றாக்குறை நிலவி வருகிறது.இதை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக
இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். இதை மாதம் இருமுறை
உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.
தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலர் வயிறு சம்பந்தபட்ட நோய்களால்
துன்பப்படுகிறார்கள். அமீபியாஸ் என்ற வயிற்று நோயால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களை மலச் சிக்கலும், அதிக மலப் போக்கும்
மாறி மாறி தொந்தரவு செய்யும். புளித்த ஏப்பம்,
உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளும் தோன்றும்.இதனால் மனசோர்வு ஏற்படும்.
இத்தகைய நோயாளிகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி
சேர்த்துக்கொள்ளவேண்டும். சுண்டை வற்றல்
சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டு
வந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய்
சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது.
கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியையும் அதிகப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் உணவில் சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்தினால் ரத்தத்தில்
சர்க்கரை அளவு குறையும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலையும் நாம் பயன்படுத்தலாம்.
சுண்டைக்காய் வற்றல்
தேவையான பொருட்கள்
§ சுண்டைக்காய் - 1/2 கிலோ,
§ மோர் - 2 லிட்டர்,
§ உப்பு - 1 மேசைக்கரண்டி.
செய்முறை
§ சுண்டைக்காயை அலசி கத்தியில் கொஞ்சமாக வெட்டிக் கொள்ளவும்.
§ கொதிக்கும் நீரில் போட்டு மூடி,
5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும்.
§ மோரில் உப்பை கலந்து சுண்டைக்காயை மோரில் போட்டு ஊற வைக்கவும்.
§ அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய
வைக்கவும்.
§ மோரையும் தனியே வெயிலில் வைக்கவும்.
§ மாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும்.
§ மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே போல் செய்யவும்.
3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்.
3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்.
§ வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.
இதனை பொறித்தும் இணை உணவாக கொள்ளலாம். அல்லது சுண்டைக்காய்
வற்றல் போட்டு குழம்பும் வைக்கலாம்.செம்ம சுவையாய் இருக்கும் நண்பர்களே.சொல்லும்
போதே நாக்கில் எச்சில் ஊறுகிறத? இன்னும் உங்கள் தோட்டத்தில் விளைந்தவை என்றால் நினைத்து பாருங்கள்.உணவே
மருந்து
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை
தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.