இந்த பூ பார்பதற்கு,ரோஜா பூ மாதரி இருக்கக்கூடியவை.இந்த பூ ரோஜா,
பிங்க், ஊதாவண்ணங்களில் இருக்கிறது.
பலவித வண்ணங்களில் இருந்தாலும், நம்ம ஊர்களில் ரெட் கலர் மட்டுமே
கிடைகிறது.
இதன் விதைகள் பார்பதற்கு கடுகு மாதரி இருக்கும்.படத்தில் இருக்கும்
பூவை காட்டி கடைகளில் இதன் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு விதையும் தனித்து வளரக் கூடியவை.நேரடி விதைப்பு முறைகளில்
விதைக்கலாம்.ஒரு அடிக்கு ஒரு அடி விட்டு நடலாம்.
இதற்க்கு சிறிது வெயில் இருந்தால் போதும்.நேரடி வெயிலில் வதங்கி
விடும்.மதிய நேரத்தல் நிழல் வரும் இடத்தில் நடவு செய்தல் சிறந்தது.
இதற்க்கு தினம் தோறும் தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் போகும் இடத்தில்
நட்டால் நன்றாக கிளை பரப்பி செடி வளரும் நண்பர்களே.
பல்வேறு வண்ணங்களில்,வரிசையாக நட்டால் அருமையாக இருக்கும்.கண்ணை
கவரும்.
இதன் ஆயுட்காலம் பூ வைக்க ஆரம்பித்ததில் இருந்து இரண்டு மாதம் தான்.
இதன் பூவை பறிக்காமல் விட்டு விட்டால், அதில் விதை வரும்.அந்த விதைகளை பறிக்கும்
சரியான நேரம் எது என்றால் உள்ளிருக்கும் விதை வெளியில் நன்றாக தெரியும்.அப்பொழுது
பறித்து கொள்ளலாம்.இல்லை என்றால் நன்கு முற்றிய நிலையிலும், செடிகளுக்கு தண்ணீர்
ஊற்றும் போதும் வெடித்து சுற்றி சிதறிவிடும் நண்பர்களே.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.